மாகாண சபை தேர்தல் ஜனவரி மாதத்தில்? மஹிந்த தேசப்பிரிய எதிர்பார்ப்பு

0
424
tamilnews provincial council election hope next january

(tamilnews provincial council election hope next january)
பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டால் மாகாண சபை தேர்தல் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் அளவில் நடத்துவதற்கான வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று (03) மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தி உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுற்றறிக்கை இதுவரையில் பூர்த்தி செய்யப்படவில்லை.

இதன்காரணமாக, தேர்தல் ஆணைக்குழுவினால் எதனையும் செய்ய முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் மாதயிறுதியில் அல்லது ஒக்டோபர் மாத ஆரம்பத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்தால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் ஆரம்ப வாரத்தில் தேர்தலை நடத்த முடியும் என்றும் பாராளுமன்ற அதிகாரத்தை நடைமுறைப்படுத்தி தேர்தல் சட்டம் உடனடியாக அமுல்படுத்தினால் மட்டுமே இது நடைபெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(tamilnews provincial council election hope next january)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :