சிறிலங்காவுக்காக ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்ஸ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்தில் உள்ள, அவரது செயலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்தினார். Sri Lanka Opposition Leader Sambanthan Enforces War Crime Inquiries
நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் , பாரிய குற்றங்களை இழைத்த சிறிலங்கா இராணுவத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று, ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ரெரன்ஸ் டி ஜோன்சிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன்,
“ ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், குறிப்பிடப்பட்டிருந்த அநேகமான விடயங்கள் குறித்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கம், இந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது மட்டுமல்லாது, இதனை நிறைவேற்றுவதற்கு மேலதிக காலஅவகாசத்தையும் கோரியிருந்தது.
அந்தக் கோரிக்கையை அனைத்துலக சமூகம் ஏற்று அனுமதித்தும் இருந்தது. ஆகவே சிறிலங்கா அரசாங்கம், தமது வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்க முடியாது.
கடந்தகால சம்பவங்கள் மீளநிகழாமையை உறுதி செய்வதற்கு, ஒரு புதிய அரசியலமைப்பு, அங்கீகரிக்கப்படுவது அவசியம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில், உள்ள அம்சங்களில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் 1988 ஆம் ஆண்டிலிருந்தே பல்வேறு கருமங்கள் இடம்பெற்று வந்துள்ளன. தற்போது இதனை முன்னெடுத்து செல்வதற்கு அரசியல் விருப்பும் தைரியமுமே தேவைப்பாடாக உள்ளது” என கூறினார்.
மேலும் சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் இணைந்து பங்கேற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிடுகையில், “காணிகள் விடுவிப்பு தொடர்பாக முடிவுகள் எடுப்பதனை தனியே ஆயுதப்படையினரிடம் கையளிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் முடிவுகளை எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :