(Rupees threatened demand 50 lakhs abducted entrepreneur)
திருவள்ளூர் அருகே தொழிலதிபரை கடத்தி 50 லட்சம் கேட்டு மிரட்டிய ரவுடிகளை போலீஸார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
சென்னை செங்குன்றம் மொண்டியம்மன் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசனை கடந்த 2-ம் தேதி முதல் காணவில்லை, என அவரது சகோதரர் ராமச்சந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் அவரது குடும்பத்தாரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர்கள், கணேசனை உயிரோடு விடுவிக்க வேண்டுமென்றால் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டல் விடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராமச்சந்திரன், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை செங்குன்றம் போலீஸாரிடம் கொடுத்துள்ளார்.
தொழில்நுட்ப உதவியுடன் செல்போன் எண்ணை டிராக் செய்த காவல்துறையினர், காஞ்சிபுரம் அருகே திருப்போரூர் பங்களாவில் கணேசன் கடத்தி வைக்கப்பட்டிருப்பதை அறிந்து அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
மேலும் , கணேசனை பத்திரமாக மீட்ட காவல்துறையினர், துப்பாக்கி முனையில் வடகரை சதீஷ், நாயுடுப்பேட்டை சுமன் உள்பட 10 பேரை கைது செய்தனர். மற்றும் , கடத்தலுக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
tags;-Rupees threatened demand 50 lakhs abducted entrepreneur
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- வதந்திகளால் தொடரும் வன்முறைகள்: வாட்ஸ்ஆப்புக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
- வீட்டுப்பாடம் எழுதாத மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!
- காவல்துறையினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: காவலர் ராஜவேலுவின் குடும்பத்தினர் கோரிக்கை!
- 51 இந்து கோயிலுக்கு நன்கொடை வழங்கிய இஸ்லாமியர்!
- காவலரைத் தாக்கிய “ரவுடி ஆனந்தன்” என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
- இயக்குநர் திவ்ய பாரதியை கைது செய்ய முயற்சி! – த.மு.எ.ச கடும் கண்டனம்!
- காஞ்சிபுரம் பெருமாள் கோவிலுக்குள் அடித்துக் கொள்ளும் ஐயர்கள்! (காணொளி)
- எஜமானரை காப்பாற்ற மின்வயரை கடித்து இறந்துபோன நாய்!
- நெஞ்சை நிமித்தி தனி ஒருவனாகச் சென்ற காவலருக்கு 18 வெட்டு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
- Tamilnews.com
- Timetamil.com
- Gossip.tamilnews.com
- Sports.tamilnews.com
- World.tamilnews.com
- Cinema.tamilnews.com