விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கண்டனம் வெளியிட்டுள்ளார். (Vijayakala’s statement trap Mahinda)
இன்று காலை கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு பல விடயங்களை ஆற்றியுள்ளதாகவும், எனினும் தமிழ் மக்களுக்காக விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்று கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக அரசியல் இலாபங்களுக்காக இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நியூயோர்க் டைம்ஸ் சர்ச்சையை மறக்கடிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு ஏற்ப விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினர் இணைந்து இதுதொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும், பதவியை கருத்திற் கொள்ளாமல் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் காவிந்த ஜயவர்தன வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- யாழில் மனதை உருக்கும் சம்பவம்; பட்டதாரி இளைஞன் தற்கொலை
- எமனாக மாறிய றம்புட்டான்; ஆறு வயது சிறுவன் பலி
- நாவற்குழியில் பெண்ணொருவர் தற்கொலை
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Vijayakala’s statement trap Mahinda