தாயுடன் பாடசாலை சென்ற மாணவி விபத்தில் சிக்கி பலி : கிளிநொச்சியில் அதிர்ச்சி

0
690
school girl dead accident killinochi

கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். (school girl dead accident killinochi)

பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் யதுர்சா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

தாயுடன் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்குச் சென்ற மாணவியை, தாய் பாடசாலைக்கருகில் உள்ள பாதசாரிகள் கடவையருகில் இறக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

பாதசாரிகள் கடவையை மாணவி கடந்து சென்ற போது, கிளிநொச்சி பக்கத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேமாக சென்ற வேன் மாணவியை மோதியுள்ளது.

இதன்போது விபத்தில் படுகாயமடைந்த மாணவி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வாகனத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு, வாகன சாரதியையும் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:school girl dead accident killinochi,school girl dead accident killinochi,school girl dead accident killinochi,