(Libya boat tragedy Boat sink UN condolence tamilnews)
லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான அனர்த்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29 ஆம் திகதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நோக்கில் ஒரு ரப்பர் படகில் மத்திய தரைக்கடல் வழியாக பயணம் செய்தனர்.
அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்ற போது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.
இந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்தமையும், கடல் சீற்றமும் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை உறுதி செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது.
இதற்காக ஆழ்ந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
படகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா? அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா? என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார் அவர்.
(Libya boat tragedy Boat sink UN condolence tamilnews)
#Libyaboattragedy #Boatsink #tamilnews
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :