கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதம் 35 டெங்கு நோயாளர்கள் இனங்காணல்?

0
453
Kilinochchi district 35 dengue cases last month alone blood samples

(Kilinochchi district 35 dengue cases last month alone blood samples)

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் 35 டெங்கு நோயாளர்கள் இருக்கலாம் எனவும் சந்தேகத்தின் பெயரில் 35 பேரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பது வழமை. (முன்னைய ஆண்டுத் தரவுகளின் அடிப்படையில்)

ஆனால், இந்த ஆண்டில் ஆனி மாதத்திலேயே இதுவரை 35 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது வழமைக்கு மாறானது என சுகாதார திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னைய வருடங்களில் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் இணையத்தளத்திலுள்ள தரவுகளின் படி ஆனி மாதங்களில் ஆகக் கூடியது 21 (2017) டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர்.

அத்துடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 170 டெங்கு நோயாளிகள் கிளிநொச்சியில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது குறித்து சமுதாய மருத்துவ நிபுணர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது, அவர்கள் ‘கடந்த வருட ஆனி மாதத் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஆனி மாதம் முடிவதற்கு முன்னரே மிக அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இது ஆபத்தான அறிகுறியாகும் (Outbreak situation) என்று தெரவித்தார்கள்.

எனவே, பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகள் உடனடியாக விழிப்படைந்து தத்தமது பிரதேசங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடின் இவ்வருட இறுதிக்குள் பாரிய டெங்குப் பரவலைக் கிளிநொச்சி மாவட்ட மக்கள் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

(Kilinochchi district 35 dengue cases last month alone blood samples

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :