பொரளை, ராஜகிரியவில் ஹெரோயின் வைத்திருந்த மூவர் கைது

0
485
Trincomalee Sambur area reported recovered heroin drugs

ராஜகிரிய மற்றும் பொரளை பகுதிகளில் ஹெரோயின் வைத்திருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 suspects arrested Heroin news Tamil

குறித்த மூவரையும் வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ராஜகிரிய ஒபேசேகரபுரவில் கைதுசெய்யப்பட்டவர் 37 வயதானவர் எனவும், அவரிடமிருந்து 85.91 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் பொரளை – வனாத்தமுல்லை பகுதியில் கைதுசெய்யப்பட்ட 35 வயதான நபரொருவரிடம் இருந்து 11.16 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பொரளை பகுதியில் கைதுசெய்யப்பட்ட மற்றுமொருவரிடம் 3.54 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரையும் இன்று மாலிகாக்கந்தை மற்றும் புதுக்கடை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

3 suspects arrested Heroin news Tamil,3 suspects arrested Heroin news Tamil