வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்

0
730
TAMIL NEWS Robbers attack ATM cash refilling team chilli powder

பத்தரமுல்லை கொஸ்வத்த பிரதேசத்தில் வர்த்தகரொருவரின் வீடொன்றில் நுழைந்து கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். (Trading house robbery)

அத்துடன் வர்த்தகரின் வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டில் இருந்த வர்த்தகர், அவரின் மகன் உள்ளிட்ட மூவரையும் கயிற்றினால் கட்டி போட்டு இந்த கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வீட்டில் இருந்த விலையுயர்ந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

எஹலியகொட – உடுமத்த பாடசாலைக்கு அருகில் கொள்ளையர்கள் தப்பிச்சென்ற கார் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Trading house robbery