அனுராதபுரம், தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இருந்து 80 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளன. Bank Robbery Anuradhapura
வங்கி ஊழியர்கள் காலையில் வங்கியைத் திறந்த போது பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளமையை அவதானித்துள்ளனர்
இதனைத்தொடர்ந்து இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வங்கியின் சி.சி.டிவி அமைப்பையும், திருடர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.