நாட்டு மக்கள் குழப்பமடைய தேவையில்லை : பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

0
330
tamilnews CEYPETCO fuel prices increased midnight today

நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. (no petrol crisis)

அதனால் மக்கள் வீணாகக் குழப்பமடைய தேவையில்லை என்று அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பெற்றோல் விநியோகம் செய்யும் தனியார் பவுசர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பெற்றோல் விநியோகத்தில் தடை ஏற்படலாம் என்று செய்திகள் வெளியாகின.

எனினும் இது போன்ற பொய்ப்பரப்புரைகளை மேற்கொள்கின்ற நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நீல் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிபொருள் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே தெரிவித்துள்ளார்.

tags :- no petrol crisis

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites