தலையில் துப்பாக்கி சூட்டுடன் முல்லைத்தீவில் இளைஞரின் சடலம்

0
414
prissiness one prisoner death relations doubt police reason Lankan

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. gun shoot mullaitheevu death body recover Tamil latest news

இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மீட்கப்பட்டுள்ள சடலத்தில் துப்பாக்கி ரவைகள் துளைத்தமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளஇந்த சடலம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் என தெரியவந்துள்ளது.

முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிச் ரவைகள் துளைத்தமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எப்படி இடம்பெற்றது என காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மிருக வேட்டைக்காக துப்பாக்கியினை பயன்படுத்திய போது துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- gun shoot mullaitheevu death body recover Tamil latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites