முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் வனப்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. gun shoot mullaitheevu death body recover Tamil latest news
இந்த சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மீட்கப்பட்டுள்ள சடலத்தில் துப்பாக்கி ரவைகள் துளைத்தமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளஇந்த சடலம், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் என தெரியவந்துள்ளது.
முள்ளியவளை 01 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தலைப்பகுதியில் இந்த துப்பாக்கிச் ரவைகள் துளைத்தமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் எப்படி இடம்பெற்றது என காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், மிருக வேட்டைக்காக துப்பாக்கியினை பயன்படுத்திய போது துப்பாக்கி வெடித்து சிதறியதில் குறித்த இளைஞனின் முகப்பகுதி மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை முல்லைத்தீவு மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- gun shoot mullaitheevu death body recover Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோத்தா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதை முதலில் அமெரிக்காவே தீர்மானிக்க வேண்டும்
- ஹீரோவாக மாறிய பிச்சை கேட்கும் நபர் : மாத்தறையில் சம்பவம்
- டெனிஸ்வரனை பதவிநீக்கம் செய்த தீர்மானத்திற்கு நீதிமன்றம் தடை
- அமெரிக்கா நிர்பந்தம் எதிரொலி – கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு மாற்று வழிகளை ஆராய்கிறது இந்தியா
- விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் கிளிநொச்சியில் மும்முரம்
- இளைஞர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து பணம் பறித்த கேரளா ஆசாமி
- பிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று! : எந்தெந்த அணிகள் மோதுகின்றன? (முழு விபரம்)
- செக்ஸ் பொம்மைகளுடன் வாழும் விசித்திர மனிதர்!!