இலங்கையின் நிர்மாணத்துறை பணிகளில், 70 வீதத்தை கைப்பற்ற சீனா முயற்சி

0
404
Chinese companies involved 40% Sri Lankan Construction

(Chinese companies involved 40% Sri Lankan Construction)

இலங்கையில் சுமார் 40 வீத நிர்மாணத்துறை திட்டங்களில் சீன நிறுவனங்களே ஈடுபட்டுள்ளதாக, இலங்கை கட்டுமான துறை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ரொஹான் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

”சீனாவின் சர்வதேச ஒப்பந்தக்காரர் சங்கம், இலங்கையின் 40 சதவீத நிர்மாணப் பணிகளை மேற்கொள்கிறது.

எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கம், இலங்கையின் கட்டுமானத் தொழில்துறையில் தமது பங்கை 70 வீதமாக அதிகரிக்கவுள்ளது. இதனால் எமது உள்ளூர் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

அதனால், சீனாவின் அனைத்துலக ஒப்பந்தகாரர் சங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக ரொஹான் கருணாரத்ன குறிப்பிட்டார்.

இலங்கையின் கட்டுமானத் திட்டங்களின் போது, உள்ளூர் நிறுவனங்களுடன் அதனைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்து குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், எந்தவொரு நாட்டினதும், வெளிநாட்டு நிறுவனங்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் போது, ஒரு இலங்கை பங்காளரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும், அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் சமர்ப்பிக்கப்படவுள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

(Chinese companies involved 40% Sri Lankan Construction)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites