NarendraModi passport Indian State Department tamilnews
நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கிடையாது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டது.
இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியிடம் 6 இந்திய பாஸ்போர்ட்டுகள் இருப்பதாகவும், அவற்றில் 2 பாஸ்போர்ட்டுகள் சில காலமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
கடைசியாக இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி சமீபத்தில் ஜூன் 12-ம் தேதி பயணம் மேற்கொண்டது தெரியவந்தது. லண்டனில் இருந்து யூரோஸ்டார் அதிவேக ரெயில் மூலம் பிரசல்ஸ் நகருக்குச் சென்றபோது பாஸ்போர்ட் விவரங்களை அதிகாரிகள் பெற்றுள்ளனர்.
நிரவ் மோடி 6 பாஸ்போர்ட்டுகள் பெற்றார் என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நிரவ் மோடி விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை தனது மவுனத்தை கலைத்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது.
அதாவது, நிரவ் மோடியிடம் ஒன்றுக்கு மேற்பட்ட செல்லுபடியாகும் பாஸ்போர்ட் எந்த கட்டத்திலும் இருக்காது என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும் நிரவ் மோடிக்கு புதிதாக பாஸ்போர்ட் வழங்கப்படும்போதும், அவரது முந்தைய பாஸ்போர்ட் தானாக ரத்தாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
மேலும் நிரவ் மோடியின் பாஸ்போர்ட் முடக்கம் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு தெரியப்படுத்தி, அவர் இருக்கும் இடத்தை கண்டறிய உதவும்படி கூறியிருப்பதாகவும் ரவீஷ் குமார் தெரிவித்தார்.
NarendraModi passport Indian State Department tamilnews
tags;-accident aeroplane black box return
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :