சுழிபுரத்தில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். (School student massacre sulipuram University students, politicians protest)
மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியை வலியுறுத்தியும் மாணவர்களும் பொதுமக்களும் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆயினும் இந்தப் போராட்டத்தில் அரசியல் வாதிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை என பலத்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சுழிபுரம் சந்தியில் இன்று காலை நடைபெற்ற வீதி மறியல் போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா, ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பிர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, பாடசாலை மாணவி றெஜினா துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
பல்கலைக்கத்தின் முன்னால் இன்று காலை ஒன்றுகூடிய மாணவர்கள் பதாதைகளைத் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக பரமேஸ்வராச் சந்தியைச் சென்றடைந்தனர்.
அங்கு வீதியின் இரு மருங்கிலும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
tags :- School student massacre sulipuram University students, politicians protest
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- ‘அரோகரா’ கோஷம் விண்ணைப் பிளக்க ரத பவனி வந்தாள் நாகபூஷணி!
- பலநூறு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றியவரா! வெள்ளை வானில் கடத்தியவரா! அடுத்த ஜனாதிபதி?
- அரசியல்வாதிகளின் உடந்தையுடன் பாதாள குழுக்கள் செயற்படுகின்றன – நாடு பாரிய ஆபத்தில் உள்ளது
- இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல்
- பிக் பாஸ் வீட்டில் முளைத்த காதல்.. : வயது வித்தியாசம் தான் பிரச்சினையாம்..!
- அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஜப்பான் இளவரசி!!