(tamilnews chilaw student leader murder suspects sent reconciliation)
சிலாபத்தில் அண்மையில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசூல் மீதான தாக்குதல் தொடர்பில், அரசாங்க சிறுவர் சீர்திருத்த பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களையும் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அங்கு தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு சிலாபம் மாவட்ட நீதிபதி மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களான மாணவர்கள் 3 பேரும் கடந்த சில தினங்களாக சிலாபம், ஆரச்சிக்கட்டுவ சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை எதிர்வரும் நாட்களில் நீர்கொழும்பு முதித சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 16 வயதான மொஹமட் பைசூல், சிலாபம் சவரான வித்தியாலயத்தின் பிரதான மாணவ தலைவனாக கடமையாற்றியுள்ளார்.
உயிரிழந்த மாணவனுக்கு அண்மையிலேயே பிரதான மாணவ தலைவன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பொறாமை கொண்ட சில மாணவர்களே மொஹமட் பைசூல் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
(tamilnews chilaw student leader murder suspects sent reconciliation)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பிரான்ஸில் குடும்பங்களிற்கிடையே இடம்பெறும் துப்பாக்கிச்சூடு!
- குழந்தைகளோடு பயணம் செய்யும் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கும் பொலிஸ்…
- கேரள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் பெண் கைது
- புகையிரதத்தில் பாய்ந்து நபர் தற்கொலை!
- ‘சிறுமி ரெஜினாவை கொலை செய்து அவளது சீருடையை நெருப்பில் எரித்தேன்” : சந்தேக நபர் அதிர்ச்சி வாக்குமூலம்
- டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
- ஈழத்தை உலுக்கிய றெஜீனாவின் படுகொலை; பொங்கியெழுந்த மக்கள்
- பாதாள கோஷ்டியால் பலியான பொலிஸ் அதிகாரி : பிள்ளைகளை தந்தெடுத்த வர்த்தகர்
- நேர்த்திக்கடன் செலுத்தும்போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
- தொலைக்காட்சியில் திகிலூட்டும் காட்சி; 10 வயது சிறுவன் பரிதாபமாக பலி
- இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை தடுமாற்றம்!