ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும்

0
489
president maithripala sirisena full moon poya day news latest tamil

புனிதமான இந்த பொசொன் பௌர்ணமி தினத்தில் மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். president maithripala sirisena full moon poya day news latest tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள பொசொன் பௌர்ணமி தின செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவதுஇ

மனித நாகரிகத்தின் திருப்புமுனைகள் ஆயுத பலத்தால் நிர்ணயிக்கப்படும் பின்னணியில் கருணையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாகரிகத்தின் நற்கீர்த்தியினை எழச் செய்யும் பொசொன் பௌர்ணமி தினம்இ ஒரு சிரேஷ்ட இனத்தின் புண்ணியகரமான ஆரம்பத்தையே எமக்கு நினைவூட்டுகின்றது.

புத்த வருடம் 236 ஆம் ஆண்டில் இன்று போன்றதொரு பௌர்ணமி தினத்தில் இடம்பெற்ற மகிந்த தேரரின் இலங்கை விஜயத்தினால் எமக்கு கிடைக்கப்பெற்றது புதியதோர் தர்மம் மாத்திரம் அல்ல. அந்த உன்னதமான நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பௌத்த கலாசாரத்தினாலும் நல்லொழுக்கத்தினாலும் தர்மத்தினாலும் போதிக்கப்பட்ட ஒரு இனமும் அதனால் உருவாகியிருக்கின்றது. அத்தோடு கல்வி இலக்கியம் கட்டடக்கலை கமத்தொழில் மட்டுமன்றி வளமான பரிபூரண வாழ்க்கை முறையும் எமக்கு கிடைத்திருக்கின்றது.

மானிட வர்க்கத்திற்கு மாத்திரமன்றி விலங்கினங்களுக்கும் செடி கொடிகளுக்கும் ஆறுகள்இ குளங்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த இயற்கைச் சூழலுக்கும் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுக்கின்ற சகவாழ்வு கோட்பாட்டினைக் கொண்ட ஒட்டுமொத்த உலகத்துடனும் ஒன்றிணைந்த வாழ்க்கை முறை எமக்கு கிடைக்கப் பெற்றதற்கு மகிந்த தேரரினால் எமக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பௌத்த தர்மத்தின் ஒளியே காரணமாகும். பிற்காலத்தில் ஒரு இனம் என்ற வகையில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த பாரிய சவால்களைக் கண்டு தளராது எழுந்து நிற்பதற்கான பாரிய உந்து சக்தியினை உருவாக்கிக் கொடுத்ததும் அன்று எமது மக்களின் ஆன்மாவில் ஆழப்பதிந்த பௌத்த அறிவே ஆகும்.

அந்தவகையில் புனிதமான இந்த பொசொன் பௌர்ணமி தினத்தில் ஒரு வனப்பகுதியில் மாமரத்து நிழலில் புனித பௌத்த போதனைகளை செவிமடுத்த ஒரு இனம் என்ற வகையில் நாம் மனம் வாக்கு காயம் ஆகியவற்றில் ஒழுக்கத்தைப் பேணும் அதேவேளை இம்மனித குலத்தை முதன்மைப்படுத்திய ஒட்டுமொத்த இயற்கைக்கும் நன்மை பயக்க எம்மை முழுமையாக அர்ப்பணிக்க உறுதி பூணுதல் வேண்டும்.

உங்கள் அனைவருக்கும் புண்ணியகரமான பொசொன் பௌர்ணமி தின வாழ்த்துக்கள்.

tags :- president maithripala sirisena full moon poya day news latest tamil

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites