நல்லாட்சி அரசாங்கம் ஹிட்லரை பின்பற்றுகிறது – நிழல் உலக குழு உறுப்பினர்களை கொலை செய்வதை ஏற்க முடியாது

0
389
Lankan government follow hitlar political method bar association

ஆயுதமேந்தும் கலாசாரம் ஒழிக்கப்படவேண்டுமே தவிர ஆயுததாரிகளை கொலை செய்வதில் எந்தவித பயனுமில்லை. Lankan government follow hitlar political method bar association

இதற்கமைய, பாதாள உலக குழு உறுப்பினர்களை பொலிஸார் சுட்டுக்கொலை செய்வதனை தன்னால் அனுமதிக்க முடியாது என சட்டத்தரணி பிரேமனாத் சீ. தொலவத்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான ஆயுதங்கள் பயன்பாடு தொடர்பில் விசாரணைகள் செய்வதாக அழைத்து சென்ற ஒருவரை பொலிஸார் சுட்டு கொலை செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பாதாள உலகு குழு உறுப்பினர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமையில்லை என்பதோடு ஹிட்லருடைய ஆட்சி முறை இந்த அரசாங்கத்தில் பின்பற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
Lankan government follow hitlar political method bar association

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites