(suspected criminal Manel Rohana alias Tilak notorious underworld)
பாதாள உலக குழு உறுப்பினரான திலக் எனும் மானெல் ரோஹன என்பவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை, கம்புருபிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடி படையுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் பாதாள உலக குழுத்தலைவர்களில் ஒருவரான மாகந்துர மாதுஸின் உதவியாளர் எனவும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி சூட்டில் சிறியளவில் காயம் அடைந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் கவலைக்கிடமான நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் நடமாட்டம், குறித்த பிரதேசத்தில் இருப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, அப்பகுதியில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இந்த தேடுதல் வேட்டையின்போது, மாத்தறை, அக்குரஸ்ஸ வீதியில் போடப்பட்டிருந்த வீதி தடுப்பை மீறி முச்சக்கரவண்டி ஒன்று சென்றது.
அது வில்பிட்ட பகுதியில் வனப்பகுதிக்குள் நுழைந்ததோடு, முச்சக்கரவண்டியில் இருந்தவர்களால் விசேட அதிரடிப் படையினரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது, விசேட அதிரடிப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் ஒருவர் கம்புறுபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, உயிரிழந்துள்ளார்.
மேலும் ஏனைய சந்தேகநபர்கள் வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதோடு, அவர்களை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் வேட்டையை, விசேட அதிரடிப்படையினர் முடுக்கி விட்டுள்ளனர்.
இந்நிலையில் ரீ-56 ரக துப்பாக்கியொன்றுடன் உயிரிழந்த நபர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவர், ‘திலக்’ எனப்படும் ஹேவா சுதுஹகுருகே மானெல் ரோஹன என்று அடையாளம் காணப்பபட்டுள்ளார்.
உயிரிழந்த மானெல் ரோஹன, பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த, மாகந்துர மதுஷ் என்பவரின் வழிகாட்டலில், தென்மாகாணத்தில், பல்வேறு பாதாள உலக செயற்பாட்டை முன்னெடுத்துச் சென்றவர் என, பொலிஸ் ஊடகப் போச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.
(suspected criminal Manel Rohana alias Tilak notorious underworld)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சம்பந்தன் – விக்னேஷ்வரன் மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் – அமைச்சர் இராதாகிருஷ்ணன்
- முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 9.8 மில்லியன் நிதி! அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு!
- வெறுங்கையுடன் வந்ததாக கூறி கையை வெட்டி சென்ற வழிப்பறி கும்பல்
- சுழிபுரம் – காட்டுப்புலத்தில் பாடசாலை மாணவி கழுத்து நெரித்து கொலை
- இராமேஸ்வரத்தில் செயலிழந்த வெடிப்பொருட்கள் மீட்பு – விடுதலைப் புலிகளுடையது என சந்தேகம்
- பர்க்கிங்காம் அரண்மையில் பாலியல் சர்ச்சை குற்றவாளி புகைப்படத்தால் சர்ச்சை
- ‘அங்கே உறிஞ்ச எப்படி அப்பா தண்ணீர் வந்தது?’ சரத் குமாரிடம் கேட்ட மகன்!
- நாளை விசேட அறிவிப்பு : ஞானசாரதேரர் தெரிவிப்பு
- சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்
- ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வேன் – கோத்தபாய
- கூலி தொழிலாளி ஒருவரின் வீட்டில் குவிந்திருந்த எண்ணற்ற பாம்புகள்!!
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
Tamil News Group websites