முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.(release Sivanesathurai Chandrakanthan)
முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி சுயமாக ஜனநாயகப் பாதையில் ஈடுபட வழி விடுமாறு கோரி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் ஆகியன இந்த அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட 7 பேர் விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி சுயமாக ஜனநாயகப்பாதையில் ஈடுபட வழி விடுமாறு கோரி உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அடையாள உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதனையடுத்து அங்கு ஒன்று திரண்ட 50 ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மட்டு நகர் காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஒன்று திரண்டு வாயை கறுத்த துணியால் கட்டியவாறு ‘நீக்கு நீக்கு சந்திரகாந்தன் மீதான பயங்கரவாத தடைச்சட்டத்தை, கிழக்கின் மைந்தனை விடுதலை செய், யாருக்கு பயங்கரவாத தடை ? எதற்காக? பயங்கரவாதம் நீக்கப்பட்ட பின் பயங்கரவாத தடைச்சட்டமா? போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு மௌனமாக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
tags :- release Sivanesathurai Chandrakanthan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
- பரபரப்பான ஆட்டம் சமனிலை – நாக் அவுட் பிரிவில் நுழைய ஜப்பான் – செனகல் பிரயத்தனம்
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பனாமாவை துவைத்தெடுத்த இங்கிலாந்து – நாக் அவுட் சுற்றில் நுழைந்தது! ரொனால்டோவை மிஞ்சினார் கேன்
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட