இராமேஸ்வரத்தில் செயலிழந்த வெடிப்பொருட்கள் மீட்பு – விடுதலைப் புலிகளுடையது என சந்தேகம் (காணொளி)

0
671
explosives recovered waste water well dug fishery village Rameswaram

(explosives recovered waste water well dug fishery village Rameswaram)

இராமேஸ்வரம் அருகே மீனவ கிராமத்தில் கழிவு நீர் கிணறு தோண்டப்பட்ட இடத்தில் செயல்யிழந்த வெடி பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெறுவதாக தமிழ் நியுஸின் தமிழக செய்தியாளர் தெரிவித்தார்.

தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் பகுதியில் கழிவு நீர் கிணறு தோண்டும் போது மர்மமான முறையில் 20 க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட பெட்டிகளில் துப்பாக்கி குண்டுகள் துருப்பிடித்த நிலையில் இருப்பதாகவும் இவற்றை விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திருக்கலாம் என காவல்துறை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டள்ளனர்.

மேலும், இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

(explosives recovered waste water well dug fishery village Rameswaram)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites