கொழும்பு, இரத்மலானை – சாக்கிந்தாராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இராணுவ அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார்.(Army Corporal sustains injuries shooting incident Ratmalana morning)
இன்று காலை 7.20 மணியளவில் குறித்த இராணுவ அதிகாரியின் வீட்டுக்கு அருகில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. உந்துருளி மற்றும் முச்சக்கரவண்டியிலும் வந்த இனந்தெரியாதோர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்துள்ள இராணுவ அதிகாரி, களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கொட்டாஞ்சேனை – ஜெம்பட்டா வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்களில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே காயமடைந்துள்ள நிலையில், அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
tags :- Army Corporal sustains injuries shooting incident Ratmalana morning
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
- பரபரப்பான ஆட்டம் சமனிலை – நாக் அவுட் பிரிவில் நுழைய ஜப்பான் – செனகல் பிரயத்தனம்
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட
- பனாமாவை துவைத்தெடுத்த இங்கிலாந்து – நாக் அவுட் சுற்றில் நுழைந்தது! ரொனால்டோவை மிஞ்சினார் கேன்
- பறந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவர் மரணம்
- சிறுத்தையை கொன்றவர்களுக்கு எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியல்!
- மனிதர்களை கொலை செய்த ஹிட்லராக மனிதன் மாறமுடியும் என புத்தர் போதிக்கவில்லை
- உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட