மனிதர்களைக் கொலை செய்த ஹிட்லர் போன்று மனிதன் தன்னை மாற்றிக்கொள்ள முடியும் என புத்தர் பெருமான் ஒரு போதும் உபதேசம் செய்ய வில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். prime minister ranil wickramasinghe answer hitlar problem latest news
மாத்தறை மஹாமந்திந்த பிரிவெனாவின் 125 ஆவது வருட நிறைவு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறினார்.
தான் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் அவ்வாறான ஒரு கருத்து கூறப்பட்டிருந்தால் தான் அந்த நேரத்திலேயே அதனை எதிர்த்திருப்பேன். பௌத்த மதத்தையும் ஹிட்லரையும் ஒருபோதும் ஒன்றாக பார்க்க முடியாது எனவும் இந்த கருத்தை தன்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் பெருமான் எந்த வேளையிலும் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்குமாறே உபதேசம் செய்துள்ளார் என சுட்டிக்காட்டினார்.
ஹிட்லர் போன்று இராணுவ ஆட்சியை கொண்டு வந்தாவது இந்த நாட்டை கட்டியெழுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மத அனுஷ்டான நிகழ்வில் உரையாற்றும் போது அஸ்கிரி பீட துணை தலைவர் வெடருவே உபாலி தேரர் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
tags :- prime minister ranil wickramasinghe answer hitlar problem latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!
- நாற்பது ஆண்டுகளுக்கு பின்னர் கால்பந்து விளையாட்டரங்கில் பெண்களுக்கு அனுமதி
- அர்ஜென்டினாவிற்குள் கால் பதிக்க முடியாதா? மாரடோனாவின் எச்சரிக்கை பலிக்குமா
- இலங்கை கிரிக்கெட் அணியில் இரு யாழ். இளைஞர்கள் : குவியும் பாராட்டு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பினார் ஜிம்பாப்வே ஜனாதிபதி
- 14 விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீதான தடை : பாராளுமன்றில் முழங்கிய மஹிந்த
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவத்தலைவன் பலி
- ஞானசார தேரரை விடுதலை செய்தமைக்கான காரணம் இதுதான்..!
- 2050 ஆம் ஆண்டில் இறக்குமதி பொருட்கள் நிறுத்தம்! – விரைவில் சட்டங்கள் தயாராகும்!