நடைபெறவுள்ள மாகாண சபை தேர்லை வலய முறையில் நடத்தினால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். (twenty four district divide 48 zone election province mano ganeshan)
அரசியலமைப்பின் 14 வது திருத்தத்திற்கு அமைய மாகாணசபைத் தேர்தலை வலய முறையில் நடத்த முடியும் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 24 தேர்தல் மாவட்டங்களையும் 48 வலயங்களாக பிரித்து, அதன் பரப்பளவை சிரிதாக்கி தேர்தலை நடத்துவதற்கே 14 வது திருத்தம் கொண்டுவரப்பட்டது.
எனினும் அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த திட்டத்தை மையமாக வைத்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்பட்சத்தில், அதிக கால அவகாசம் தேவைப்படாது.
அத்துடன், கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஏற்பட்ட குறைப்பாடுகளை சரிசெய்து எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
எனவே எந்த முறையிலாவது இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும் என அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
இதேவேளை, மாகாணசபை தேர்தல் காலதாமதமின்றி நடத்தப்படுவதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்துவதற்கான அரசியல் கட்சி பிரதிநிதிகள் மட்டத்திலான சந்திப்பொன்று எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு தேர்தல் ஆணைக்குழுவுடன் நடத்தப்படவுள்ளது.
அத்துடன், மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது குறித்த நாடாளுமன்ற விவாதம் ஒன்று அடுத்த மாதம் ஆறாம் திகதி இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவெல குறிப்பிட்டுள்ளார்.
tags :- twenty four district divide 48 zone election province mano ganeshan
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை