மூன்று வருடங்கள் நீடித்த சைட்டம் பிரச்சினைக்கு சகலரும் ஏற்கும் தீர்வு வழங்கப்பட்ட போதும் ஊடகங்கள் அதற்கு முன்னுரிமை வழங்காமல் பிரதி அமைச்சர் ஹரீஸுடனான விவாதத்தை பெரிதுபடுத்தி காண்பித்திருப்பதாகவும் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். Lankan media under business vijayadasa rajapaksha question parliament
சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து உயர்கல்வி மற்றும் கலாசார அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ உரையாற்றும் போதே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்தார்.
சில ஊடகங்கள் நடந்து கொள்வதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கலாமென மக்கள் சந்தேகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சைட்டம் தீர்விற்காக 400 க்கும் அதிகமான ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றன இடம்பெற்றன.
இதற்கு ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தன. ஆனால் எதிர்ப்பு இன்றி கொத்தலாவல பாதுகாப்பு திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடிந்துள்ளது.
சகலரும் ஏற்கக் கூடிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எந்தப் பத்திரிகையும் முன்னுரிமை வழங்கவில்லை.
எனக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸுக்குமிடையில் மோதல் ஏற்பட்டதாக பிரதான தலைப்புச் செய்தி வெளியிடப்பட்டது. ஏற்கெனவே நான் கூறிய விடயமொன்று தொடர்பாக பிரதி அமைச்சர் உரையாற்றினார்.
அதற்கு நான் நட்பு ரீதியாக பதில் வழங்கினேன். அதனை மோசமான பெரிய மோதலாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுவது உகந்ததல்ல என தெரிவித்துள்ளார்.
tags :- Lankan media under business vijayadasa rajapaksha question parliament
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை