பேராதெனிய போதனா வைத்தியசாலையின் சிற்றுண்டிசாலையில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவில் இருந்து மனிதப் பல் ஒன்று வீழ்ந்து கிடந்துள்ளது. (Human Dental Peradeniya Teaching Hospital Restaurant)
குறித்த சிற்றுண்டிச் சாலையில் இருந்து எடுத்த காலை உணவை வைத்தியசாலை பொலிஸ் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உண்ணும் போதே மனித பல்லின் ஒரு பகுதி கிடைத்துள்ளது.
இந்த உத்தியோகத்தர் வைத்தியசாலையின் சிற்றுண்டிசாலைக்கு சென்று பாணும், பருப்பு கறியும் பெற்று, உண்ணும் போது கடினமான பொருள் ஒன்று அகப்படவே, அதனை வாயில் இருந்து வெளியே எடுத்து பரிசோதித்த போது மனித பல்லின் ஒரு பாகம் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அசௌகரியத்துக்குள்ளாகிய பொலிஸ் உத்தியோகத்தர், சிற்றுண்டி சாலையின் சேவையாளரிடம் இதுகுறித்து வினவியபோது, துண்டுப் பாணில் இருந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இதன்பின்னர் பாணின் மிகுதி பாகத்தையும் அவருக்கு கிடைத்த பல்லின் பகுதியையும் எடுத்த்ச் சென்று பேராதெனிய போதனா வைத்தியசாலையின் அத்தியட்சகருக்கு தெரிவித்த போது, இந்தச் சம்பவத்தை எழுத்து மூலம் தனக்கு தெரிவிக்குமாறும் கூறியுள்ளார்.
இதனை மருந்து சேவை பரிசோதகரிடம் கொடுத்து, அவரின் அறிக்கையை பெற்ற பின்னர், பேராதெனிய போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலைக்கு பாண் விநியோகிக்கும் பாண் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைத்தியசாலையின் பிரதி அத்தியட்சகர் இமேஷ் ப்ரதாபசிங்க தெரிவித்துள்ளார்.
tags :- Human Dental Peradeniya Teaching Hospital Restaurant
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அதிரடி ஆட்டத்தால் சேர்பியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சுவிட்சர்லாந்து
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- சிறுத்தையை கொன்றவர்களை சிறையில் அடைக்க முஸ்தீபு; தமிழர்கள் மீது பாரபட்சம்
- நண்பர்களால் தாக்கப்பட்ட மாணவன் மொஹமட் கோமா நிலையில் – மூன்று மாணவர்கள் கைது
- 125 மில்லியன் இலஞ்சம் – சுங்க அதிகாரிகள் மீது வழக்கு விசாரணை
- ‘ஸ்மார்ட் நகரங்களை’ இலங்கையிலும் நிர்மாணிக்க திட்டம்
- தேர்தல் காலத்தில் ஆயுதங்களை வைத்திருந்த இரண்டு தேரர்கள் மீது தீவிர விசாரணை