(tamilnews student leader worried conflict school students Chilaw)
சிலாபத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவத் தலைவன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் சிலாபத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
சவறான பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ரிஸ்வி மொஹமட் பைசுல் என்ற 16 வயது மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானார்.
கடந்த 15 ஆம் திகதி இரவு 10 மணியளவில் பாடசாலை மாணவர்கள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிலாபம் சவறான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் பின்னர் தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் குறித்த மாணவன் அனுமதிக்கப்பட்ட பின்னர் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
ஆரம்பத்தில் பல தடவைகள் அவர் விழிந்தெழுந்ததுடன், அனைத்து சம்பவங்களையும், ஆட்களையும் மறந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
(tamilnews student leader worried conflict school students Chilaw)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- சிறுத்தையை கொலை செய்த கிளிநொச்சி வீரர்களை கைதுசெய்ய உத்தரவு
- கிளைமோரில் இலக்கு வைக்கப்பட்டது சுமந்திரனாம் – முல்லைத்தீவு சம்பவம் தொடர்பாக பொலிஸார் அதிர்ச்சி தகவல்
- மகளை கொல்ல முயன்ற தந்தையின் கத்திக்குத்துக்கு இலக்காகி முன்னாள் போராளி மரணம்
- பட்டதாரிகளை பாதிக்காத வகையில் நேர்முகப் பரீட்சை நடத்தி, ஆள்சேர்ப்பு இடம்பெறவேண்டும் – வடக்கு பட்டதாரிகள் மன்றாட்டம்
- யாழ். பயணம் சிறப்பாக அமைந்தது – நோர்வே அமைச்சர் பலதரப்பினருடன் சந்திப்பு
- இலங்கையின் ஜனாதிபதியாக சர்வாதிகாரி ஹிட்லர் வேண்டாம் – அஜித் பி பெரேரா
- நுவரெலியா பூங்கா பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிப்பதற்கு விசேட திட்டம்
- அத்துமீறிய கடலட்டை பிடிப்பவர்கள் தொடர்பில் துரித தீர்வு வேண்டும்
- சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட தமிழர்கள்!!
- அம்பேவெல பகுதியில் விபத்து – லொறி – முச்சக்கரவண்டி மோதி இருவர் படுகாயம்
- பிரபஞ்ச உலக அழகிப் போட்டிக்கு தயாராகும் தமிழ்நாட்டு நங்கை!
- கொழும்பு விபத்தில் காதலன் உயிரிழந்தது தெரியாமல் காதலி செய்த காரியம்
- சீனா ஆட்டத்தை ஆரம்பித்தது – இலங்கைக்கு முதல் அதிர்ச்சி வைத்தியம்