நேற்று வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் Haute-Garonne நகரில் சிகரெட் வழங்க மறுத்த காரணத்தால் நபர் ஒருவர் கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இச்சம்பவம் ரயில் நிலையத்துக்கு அருகே, நள்ளிரவில் இடம்பெற்றுள்ளது. (person attacked forr ask cigarette)
Saouzelong நிலையத்துக்கு அருகே நின்றிருந்த நபர் ஒருவரிடம், எதிரே வந்த நபர் ஒருவர் சிகரெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கூரான கத்தி ஒன்றின் மூலம் தாக்கியுள்ளார். அதன் பின்னர் அந்த தாக்குதலாளி தப்பி ஓடியுள்ளார். காயமடைந்த நபர் கைகளால் காயத்தை பிடித்துக்கொண்டு, 100 மீட்டர்கள் வரை நடந்து சென்று, பிறிதொரு நபரிடம் நடந்ததைக் கூறிவிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- person attacked forr ask cigarette
**Most Related Tamil News**
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- பாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!