கடலட்டைகளை சூறையாடிய தென்னிலங்கை மீனவர்கள் கைது

0
444
tamilnews south fishermen robbing north sea cucumbers

(tamilnews south fishermen robbing north sea cucumbers)

யாழ்ப்பாணம் வடமராட்சியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டைகளை பிடித்து வந்த வௌிமாவட்ட மீனவர்கள் எட்டு பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பரப்பில் சட்டவிரோதமாகக் கடலட்டை பிடிக்கப்படுவதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

வௌிமாவட்ட மீனவர்கள், இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் மீன்பியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உள்ளூர் மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.

வௌிமாவட்ட மீனவர்களின் மூன்று படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமராட்சி கிழக்குக் கடற்பரப்பில் அண்மைக்காலமாக வௌிமாவட்ட மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில், கடந்த வாரம் பாரியளவில் ஆர்ப்பாட்டங்களும் முற்றுகைப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

எவ்வாறாயினும், கடலட்டை பிடித்த வௌிமாவட்ட மீனவர்கள் இன்று சுற்றிவளைத்து செய்யப்பட்டதாக கட்டைக்காடு பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

(tamilnews south fishermen robbing north sea cucumbers)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை