மல்லாகம் துப்பாக்கிச் சூடு – போராட்டத்தை தலைமை தாங்கியவர் கைது 

0
422
tamilnews police arrested person led street protests mallagam

(tamilnews police arrested person led street protests mallagam)
மல்லாகத்தில் இடம்பெற்ற வீதி மறியல் போராட்டத்தை தலைமை தாக்கி நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர், அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியவரை தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே நேற்று (20) இரவு 9 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரச பணியாளராக இருந்து கொண்டு போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டிலேயே மல்லாகம் நீதிமன்ற வீதியைச் சேர்ந்த குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

(tamilnews police arrested person led street protests mallagam)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை