கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, இன்று மதியம் 3 மணியளவில் ஹட்டனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (Protest rally Hatton emphasize release Gnanasara Thera)
ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து குறித்த எதிர்ப்பு ஊர்வலத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரை விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த எதிர்ப்பு ஊர்வலம் இன்று ஹட்டனில் இடம்பெற்றது.
ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் விகாராதிபதிகளில் ஒருவரான ஒமந்தே தீராநந்த தேரரின் ஏற்பாட்டில் பிக்குமார்கள் மற்றும் ஹட்டன் பிரதேச மக்கள் மலர் தட்டுக்களை ஏந்திய வண்ணம் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் இருந்து ஹட்டன் நீக்ரோதாரம விகாரைக்கு ஊர்வலமாகச் சென்று, விகாரையில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
tags :- Protest rally Hatton emphasize release Gnanasara Thera
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites