“நான் முதல் தடவை உறவுகொள்ளும் போது அவள் கன்னித் தன்மையுடன் இல்லை”

0
449
Galle Murder Sandamali news update

காலியில் அண்மையில் யுவதியொருவரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. Galle Murder Sandamali news update

பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கியதாகக் கூறி, அவரது சடலத்தை சிலர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இச்சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

சந்தமாலி என்ற குறித்த பெண் கொலை செய்யப்பட்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர். குறித்த பெண் திலான் என்பவருடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும், அவர் ஏற்கனவே திருமணமானவர் என மகள் தெரிந்து கொண்டமையால், அவரைப் பிரிந்ததாகவும், ஆனால் அவர் அதனை கைவிட முடியாமல் , மகளை பின் தொடர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

அவரே மகளை கொலை செய்ததாகவும், பெண்ணின் தாயார் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இக்கொலை தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தமாலியும் அவளின் நண்பர்களும் நாங்கு வருடங்களுக்கு முன்பு திலானின் வேனில் கண்டிக்கு ஒரு உல்லாச பயணம் சென்ற போதே முதலாவதாக சந்தித்துள்ளனர்.

திலான் ஒரு பிள்ளையின் தகப்பனாகிய போதிலும் இவர்களின் உறவு காதலாக மாறி பின்பு இவர்களின் பாலியல் தூண்டுதலை விடுதியில் வைத்து நிறைவேற்றும் வரை முன்னேறி இருந்தது.

இது தொடர்பில் திலான் தெரிவித்துள்ளவை;

“அப்போது மனைவிக்கு பிள்ளை கிடைத்து ஒரு வருடமாகவில்லை. நானும் சந்தமாலியும் ஒருநாள் அறைக்கு சென்று கட்டிலில் ஒன்றாக இருக்கும் போது அவள் என்னுடைய மனைவியின் கைப்பேசிக்கு அழைப்பொன்றை எடுத்து நாங்கள் உடலுறவின் போது செய்கிறதெல்லாம் மனைவிக்கு கேட்கும் படி ஏற்பாடு செய்திருந்தாள்.”

“நான் வீடு சென்ற போது மனைவி என்னை விட்டு செல்ல தயாராக இருந்தாள். என்னையும் பிள்ளைகள் இருவரையும் வேண்டாம் என விட்டு சென்று விட்டாள். அதன் பிறகு விவாகரத்து வழக்கு தொடுத்திருந்தாள். இப்போது இரண்டு வருடம் ஆகின்றது, தீர்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை”

“எனது பிள்ளைக்கு தாய்ப்பால் கூட இல்லாமல் போய்விட்டது. என்றாலும் என்னால் ஒன்ரும் செய்ய முடியவில்லை. எனது அம்மாவினதும் அப்பாவினதும் உதவியால் எனது பிள்ளையை வளர்த்தேன்”.

“நான் சந்திக்கும் போதும் சந்தமாலி ஒரு கன்னிப் பெண் இல்லை. அதனால் பயம் ஏதும் இல்லாமல் என்னுடன் அறைகளுக்கு சென்று எல்லாம் செய்வதற்கு இடம் கொடுத்திருந்தாள்”

“அவள் என்னுடைய வாழ்க்கைக்கு இவ்வாறான பாதிப்பு ஏற்படுத்தியிருந்தாலும் அவளை நான் நேசித்தேன். இப்படி இருக்கும் போது அவளின் தகப்பனும் தாயும், என்னையும் அவளையும் கொழும்புக்கு அழைத்துக் கொண்டு போய் மணமுடித்து வைத்தனர்.”

“அவள் என்னோடு காதல் கொண்ட போது மேலும் மூன்று வாலிபர்களுடன் தொடர்பு வைத்திருந்தது எனக்கு தெரியவந்தது. அதனால் எங்கள் இருவருக்கும் இடையே தொடர்ச்சியாக சண்டைகள் ஏற்பட்டது.”

” எல்லா ஞாயிற்றுகிழமைகளில் அவள் என்னை சந்திக்க வந்தாலும் கடந்த ஞாயிறு அவள் என்னை சந்திக்க வரவில்லை. நான் கைப்பேசிக்கு அழைத்த போதிலும் பதில் அளிக்கவில்லை. பைக் ஒன்று செல்லும் சத்தம் எனக்கு கேட்டது. பிறகு பார்த்த போது கைப்பேசி ஓப் செய்யப்பட்டிருந்தது. நான் நிறைய சந்தேகப்பட்டேன்.”

“சம்பவம் நடைப்பெற்ற தினம் நான் அவளை எனது வேனில் பின் பக்கம் ஏற்றி ஞாயிறு என்ன நடந்தது என்று கேட்டேன். அவள் என்னுடன் சண்டை போட்டாள். பின்பக்கம் சீட்டிலிருந்து என்னை தாக்கியதால் நானும் தாக்கினேன்.”

அதன் பின்பு இந்தச் சண்டை நீடித்துள்ளது. திலான் தனது கையில் கிடைத்த இரும்புக் கம்பியை கொன்டு தலையில் தாக்கியதாக கூறப்படுகின்றது. அதன் பின்பு அவள் வாகனத்தின் ஆசனத்தில் சாய்ந்துள்ளதோடு ,ஒரு சத்தமும் இல்லாததினால் பதற்றமடைந்த திலான் அவள் முகத்திற்கு தண்ணீர் தெளித்து மயக்கத்தை போக்க எடுத்த முயற்சி வீணானது. பின்பு திலான் அவளை வைத்தியசாலைக்கு கொன்று சென்று தனது நண்பி, மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட விபத்தினால் மயக்கமுற்றிருக்கின்றாள் என கூறி அனுமதித்துள்ளார். வைத்தியசாலையில் தனது பெயரையும் விலாசத்தையும் கூறியிருந்ததாக கூறப்படுகின்றது.

எனினும் அவரது வாகன இலக்கத்தை வைத்தே பொலிஸார் அவரைக் கைதுசெய்ததாக கூறப்படுகின்றது.

tags :- Galle Murder Sandamali news update
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
சொந்த தம்பியை காதலித்து திருமணம் செய்த அக்கா
துண்டிக்கப்பட்ட காலை சமைத்து தனது நண்பர்களுக்கு பரிமாறிய வினோத மனிதர்
படுக்கைக்கு அழைத்த இயக்குனரை பளீரென்று அறைந்த பிக் பாஸ் நடிகை
இளம் நடிகைகளை விபச்சாரத்திற்கு உட்படுத்திய ஆந்திர தம்பதி : திடுக்கிடும் வாக்குமூலம்
கால்பந்தாட்ட போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுடன் உடலுறவு கொள்ள வேண்டாம் :ரஸ்சிய எம்பி
காருக்குள் தமிழ் பெண்கள் போட்ட கூத்து: வைரலாகும் காணொளி
கால் டாக்சியில் உல்லாசமாக இருந்த இரு லெஸ்பியன் பெண்கள் :அதிர்ச்சியில் டிரைவர் செய்த செயல்
இலங்கை வந்த பிரபல இந்திய நடிகையின் குளியல் காட்சி வெளியாகியது!
“கமல் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ” பிரபல துணை நடிகை குமுறல்
தமிழர்களை உலுக்கியுள்ள மரணங்கள்: இரண்டு நாட்களில் இரு இளம் பெண்கள்

 

எமது ஏனைய தளங்கள்