பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெலிக்கடைச் சிறைச்சாலையில் தனியான சலுகைகள் வழங்கப்படாது என சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. (Gnanasara Thera treated ordinary prisoner)
ஏற்கனவே, தண்டனை அனுபவிக்கும் 15 பௌத்த பிக்குகளைப் போன்றே அவரும் சாதாரண கைதியாகவே நடத்தப்படுவார் என்றும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கலகொட அத்தே ஞானசார தேரர் காவி உடையுடன் சிறைத் தண்டனை அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
எனினும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன், அவருக்கு கைதிகள் வழக்கமாக அணியும் அரைக் காற்சட்டையே வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஏற்கனவே 18 பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் 15 பேர் பௌத்த பிக்குகள் என்றும் ஆறு மாதங்கள் தொடக்கம் 7 ஆண்டுகள் வரை இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அரைக்காற்கட்டையுடன் கூடிய சிறைச்சாலை உடையே அணிந்திருக்கின்றனர். இவர்கள் தவிர, மேலும் 10 பௌத்த பிக்குகள் பல்வேறு குற்றச்சாட்டுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதகுருமார் தலா ஒவ்வொருவரும் சிறைத் தண்டனையை அனுபவிக்கின்றனர்.
கொலை, பாலியல் துஷ்பிரயோகம், கொள்ளை, வன்முறை, மற்றும் அரசுக்கு எதிராக சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இவர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களில் இந்து மதகுரு, சந்திரிகா குமாரதுங்க கொலை முயற்சி வழக்கில் தண்டனையை அனுபவித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
tags :- Gnanasara Thera treated ordinary prisoner
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கோட்டாபய ஒரு சர்வதேச தீவிரவாதி – சம்பிக்கரணவக்க!!
- பூதாகரமாகியுள்ள ஞானசார தேரர் விவகாரம் : இன்று முக்கிய சந்திப்பு
- சுயாட்சியை வழங்குங்கள் : மைத்திரிடம் நேரடியாக தெரிவித்த சிவி
- ஏ9 வீதியில் சினிமா பாணியில் நடந்த விபத்து : பொலிஸ் அதிகாரிகளுக்கு நிகழ்ந்த கொடூரம்
- வவுனியாவில் வைத்தியசாலையில் அரங்கேரிய பாலியல் துஷ்பிரயோகம் : அம்பலத்திற்கு வந்தது
- நெஞ்சுப் பகுதியால் வெளியே வந்த குண்டு; இரத்தப் போக்கே உயிரிழக்க காரணம்
- மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; ஐவரும் விளக்கமறியலில்
- துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 33 பேர் பலி; களத்தில் கொழும்பு விசேட பிரிவினர்
- ஞானசார மீதான பிணை மனு : சற்றுமுன்னர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
- யாழ். கோட்டைக்குள் இராணுவத்தை அமர்த்த முடியாது; ஆனோல்ட்
- ஞானசார கைது : அரசியலமைப்பில் இதனை கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்
- பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பரபரப்பு : கண்ணீர்ப்புகை பிரயோகம்
- காணாமல் போதல் சம்பவங்களுக்கு முக்கிய காரணம் ; அல்ஜசீரா
- மீண்டும் மஹிந்தவிடம் தலைமைத்துவம்
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; பகீரங்கப்படுத்திய கருணா அம்மான்
- மொறட்டுவ பகுதியில் இப்படியும் ஒரு சம்பவம் : காணாமல் போன கணவன் மருமகளின் தாயுடன்…
- அக்கரைப்பற்றில் துண்டுப்பிரசுரம் : முஸ்லிம்களுக்கு விடுக்கும் அவசர கோரிக்கை
- பிக்குகள் சிறையில் எவ்வாறு அடைக்கப்பட்டார்கள்; வரலாற்று ஆதாரம்!!
- 70 அரச நிறுவனங்கள் முஸ்லிம் அமைச்சர்கள் வசம் – மனோ!!
- முஸ்லிம்களினால்தான் பொதுபலசேனா தோன்றியது!!