விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடிய விமானப் படையினர் கைது

0
499
Air force arrested searching LTTE gold
முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தை தேடிய இலங்கை விமானப் படையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Air force arrested searching LTTE gold)

குறித்த மூவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி பி. ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டதாக நம்பப்படுகின்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தை தேடும் நடவடிக்கையில் பல தரப்பினர் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

tags :- Air force arrested searching LTTE gold

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites