மல்லாகம் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்; ஐவரும் விளக்கமறியலில்

0
557
mallakam shooting incident

மல்லாகம் சகாய மாதா ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 5 இளைஞர்களையும் எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (mallakam shooting incident)

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அண்மையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இரண்டு தரப்புகளுக்கு இடையே மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இதன்போது அந்த வழியால் சென்ற பொலிஸார் தலையிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பளை பொலிஸார், இரண்டு தரப்புகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போதே பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக நீதவானுக்கு அறிக்கை முன்வைத்தனர்.

மோதலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய நீதவான் உத்தரவிட்டிருந்தார். மோதல் சம்பவங்களில் காயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் ஐவரும் நேற்று மாலை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

5 சந்தேக நபர்களும் கூரிய ஆயுதங்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் எனவும் பொது இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் எனவும் பொலிஸார் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இதனை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபர்கள் 5 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

tags :- mallakam shooting incident

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites