அக்கரைப்பற்று முஸ்லிம்கள் மீது இனவாதத் தாக்குதல்; கொலை செய்வோம் என அச்சுறுத்தல்

0
753

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் இராணுவ முகாமுக்கு அருகில் முஸ்லிம் சகோதரர் ஒருவருக்குச் சொந்தமான காணியில் வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (Racist attack Akkaraipattu Muslims)

ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் தூண்டுதலில் பேரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் மோட்டார் சைக்கிள்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்கள் காணி வாங்கக்கூடாது, மீறி வாங்கினால் கொலையும் செய்வோம் எனவும் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டே இந்த இனவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக ஏற்கனவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு, வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்றைய இந்தத் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்கள் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு வந்து திட்டமிட்ட வகையில் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags:- Racist attack Akkaraipattu Muslims

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites