காவிரி மேலாண்மை ஆணையம் உடனே செயல்பாட்டுக்கு வர பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

0
443
5 crore Chief Ministers public relief fund indiatmilnews tamilnews

Chief Minister Edappadi Palanisamy said additional requests proposed

டெல்லியில் நடைபெற்ற நான்காவது நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கூடுதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

நிதி ஆயோக் கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டெல்லியில் இன்று நடந்த நிதி ஆயோக்குழுக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் கூடுதல் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நீர்மேலாண்மை, குடிமராமத்து பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தை 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தவும், ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி தொடங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி ஒழுங்காற்றும் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க வேண்டும். விவசாயிகள் வளம் பெறவும், வேளாண் விற்பனை கூடங்களை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின் படி தமிழகத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Chief Minister Edappadi Palanisamy said additional requests proposed

Tags: Edappiyar Ramalan greeting ramazan

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு! (முழு விபரம் உள்ளே)

*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!

*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!

*நாடு முழுவதிலும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com