ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!

0
1164
twenty million Lankan rupees robbery bulath sinhala latest news

தன்னியக்க பணம் பெறும் இயந்திரத்தில் 80 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாவினை மோசடியாக பெற்ற இரண்டு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். (auto teller machine robbery jaeala negambo two suspects arrest)

நீர்க்கொழும்பு மற்றும் ஜாஎல பிரதேசங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ள நிலையில் , காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் குரண பிரதேசத்தில் வைத்து செய்து செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து அவர்களால் மோசடி செய்யப்பட்டதாக கூறப்படும் 28 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

அதேபோல் , குறித்த பணத்தில் வாங்கியதாக தெரிவிக்கப்பட்ட உந்துருளி ஒன்றினையும் பொலிசார் கையகப்படுத்தியுள்ளனர்.

நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய குறித்த இளைஞர்கள் இருவரும் நீர்க்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

tags :- auto teller machine robbery jaeala negambo two suspects arrest

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites