ஈதுல் பித்ர் எனும் ஈகைத்திருநாள் மூலம் உலக நியதியை உள்வாங்கிய செய்தியினை எமக்கு உணர்த்தி நிற்கின்றது. சமாதானம், நல்லிணக்கம் மேலோங்க இந்தச் செய்தியொன்றே போதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கின்றார். (maithripala sirisena ramadan wishes)
ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது:-
மானிட வர்த்தகத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்வதே முதன்மைத் தேவையாக அமைகின்றது. சமூகத்திற்கு ஒவ்வாத எவ்வாறான செயல்களினதும் ஆரம்ப கரு மனித மனங்களிலேயே உதிக்கின்றது. அந்த வகையில் மானிட வர்க்கத்தின் விடுதலையும் நலனும் மனித நேயம்மிகு நற் சிந்தனைகள் வளமாகவும் பலமாகவும் அமையும் பின்னணியிலேயே உருவாகின்றது.
உலக வாழ் முஸ்லிம்கள் ஒரு மாத காலம் நோன்பு நோற்று தியாகத்தையும் சமாதானத்தையும் நன்மதிப்பையும் முதன்மைப்படுத்தும் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள் மூலம் இந்த உன்னதமான செய்தியினையே உலகிற்கு எடுத்துரைக்கின்றார்கள்.
அது உலக நியதியை உள்வாங்கிய செய்தியாகும். உலக வாழ் மக்களின் நலனும் அவ்வாறான நற் செய்திகளின் பொருளைப் புரிந்து மற்றவர்களோடு ஏற்படுத்திக்கொள்ளும் புரிந்துணர்விலேயே தங்கியிருக்கின்றது.
இன்றைய சூழ்நிலையில் பெரும் இக்கட்டான நிலைமையை சந்தித்திருக்கும் தற்கால உலக சமூகங்களுக்கிடையில் நல்லொழுக்கத்தையும் நேசத்தையும் நீட்டி நேர்மையாக நடந்துகொள்வதிலேயே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும் இதமான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதையே ரமழான் நோன்பு எமக்கு கற்றுக்கொடுக்கின்றது.
வெறுமனே வேதம் என்ற எல்லையைக் கடந்து உன்னதமான மனிதத்துவத்துடன் உறவாடும் நேர்மையான நோக்கைக்கொண்ட இலங்கையருக்கும் உலக வாழ் இஸ்லாமியருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
tags :- maithripala sirisena ramadan wishes
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டில் சட்டத்தை வலுப்படுத்துவதே குடிமக்களின் பொறுப்பு
- ஹெரோயின் துப்பாக்கியுடன் வெலே சுதாவின் ஆதரவாளர் கைது
- 20 அடி பனை மரத்திலிருந்து விழுந்து குடும்பஸ்தர் தற்கொலை!
- குற்றம் செய்த இராணுவத்தினரை காட்டிகொடுங்கள் : சி.வி. சினம்
- ஆனந்த சுதாகரனின் பிள்ளைகளை காப்பாற்ற முடியாத ஜனாதிபதியின் செயல் வேடிக்கையானது
- குற்றவாளி கூண்டில் ஞானசார செய்த செயல் : கோபமடைந்த நீதிபதி
- நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய மஹோற்சவப் பெருவிழா!
- பெண்ணொருவருக்காக மோதிக்கொண்ட ஏழு இளைஞர்கள்; கம்பளையில் சம்பவம்
- ஞானசார தேரருக்கு வெள்ளை உடை : சட்டம் அனைவருக்கும் சமம்
- பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு சென்ற மாணவிக்கு குழந்தை!
- காலியில் 54 வயதுடைய நபருடன் 28 வயதுடைய பெண் கள்ளத் தொடர்பு : இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
- ஞானசாரவுக்கு அந்த நோயா? : வைத்தியசாலையில் அனுமதிப்பு
- தெற்காசியாவில் இலங்கைப் பெண் விமானிகள் படைத்த சரித்திரம்!!
- விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடி எடுக்கச் சென்ற நால்வர் கைது
- அக்கரப்பத்தனையில் சிறுவர் கடத்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
- நாளை ஈதுல் பித்ர பண்டிகை தினமாக அறிவிப்பு
- ஆசிரிய இடமாற்றத்தின் போது அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும் – இராதாகிருஸ்ணன்
- 200 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது – இந்தியரும் சிக்கினார்
- நடுக்கடலில் சிக்கிய 5 மீனவர்கள் – காப்பாற்றிய இலங்கை கடற்படை
- இரண்டாம் கட்டமாக தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசு உத்தரவு