கம்பளை பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்விகற்கும் மூன்று மாணவர்கள், மாணவி ஒருவர் மேல் வைத்திருந்த காதல் தொடர்பான சம்பவத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் மாணவன் ஒருவன் காயமுற்று கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (Gampola area School Three Students clash)
இந்தச் சம்பவம் கம்பளை பேரூந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கைகலப்பில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் தொடர்பாக கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவனின் உடல் நிலைமையை பொறுத்தே ஏனைய மாணவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை வகுப்புகளுக்கு பின்னர் தனியார் பயிற்சி வகுப்புகளுக்கு சென்ற பின்னர், வீடு திரும்புவதற்கு பேரூந்து நிலையத்திற்குச் சென்ற குறித்த மாணவர்கள் அங்கிருந்த அதிகளவிலான மக்களுக்கு மத்தியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கம்பளை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இந்த கைகலப்புடன் தொடர்புடைய மாணவன் ஒருவனுடன் காதல் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த மாணவி மேல் காதல் கொண்ட வேறொரு பாடசாலை மாணவன் ஒருவன் இதனை தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
tags :- Gampola area School Three Students clash
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!