புனித நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்ற முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். (Eid Mubarak Greetings opposition Leader R.SAMPANTHAN)
இன்றைய தினம் இரா. சம்பந்தன், ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
சுய தியாகம் மற்றும் மற்றவர்களுக்கு உதவுதல் என்பவற்றின் மகத்துவம் பற்றி புனித ரமழான் மாதம் எமக்கு நினைவூட்டுகின்றது.
பல்வேறு இன மற்றும் சமய ரீதியான பின்னணிகளைக் கொண்ட மக்கள் மகிழ்ச்சியுடன் ஐக்கியப்படுவதற்கு இப்புனித மாதத்திலே எமக்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.
இப்புனித நாளினைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தல் மற்றும் எமது நாட்டிலே சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உதவுதல் போன்ற விடயங்களை மறக்காமல் இருப்பதற்கும் நாம் உறுதி பூணுவோம்.
தமது எதிர்காலம் குறித்து நம்பிக்கையற்றிருக்கும் மக்கள் தமது எதிர்பார்ப்புகளையும் மகிழ்ச்சியையும் அடைந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிட்டவேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன் என்றும் எதிர்;கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
tags:- Eid Mubarak Greetings opposition Leader R.SAMPANTHAN
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஹிந்த குடும்பத்திற்கு எதிரான விசேட உயர் நீதிமன்றம் ஜூலையில் விசாரணைகளை ஆரம்பிக்கும்
- 67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி!!
- வடக்குமாகாணப் பிரதம செயலாளரின் மனு விசாரணை நாளை.!!
- புங்குடுதீவில் கரை ஒதுங்கியுள்ள இரு சடலங்கள்
- மஸ்தானை வைத்து இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? : ஜனாதிபதியிடம் மனோ கேள்வி
- சிறுபான்மை மக்களை கறிவேப்பிலையாக பாவித்து ஆட்சி பீடம் ஏறிய இந்த அரசாங்கம் தொடர்ந்தும் அவர்களை ஏமாற்றி வருகிறது!!
- யாழில் திடீரென கைது செய்யப்பட்ட 15 பேர்!
- முதிர்ச்சி பெற்ற ஜனநாயகமே இது- அமைச்சர் ஹரின்
- கோட்டாபயவின் சீனப் பயணம்; அதுல் கேஷாப் கேள்வி
- ஒன்பது வருடங்களாக சுவாசக் குழாயில் இரும்புடன் வாழ்ந்த யாழ் இளைஞன்!
- கொழும்பில் இடம்பெற்ற சோகச் சம்பவம்; இளைஞன் பலி
- காங்கேசன்துறைக் கடலில் காணாமல் போன மீனவர்களின் நிலை என்ன….?