கடும் மழை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பாரிஸ் புறநகர் RER ரயிலில் பயணம் செய்த ஏழு பயணிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Paris commuter train overturns seven injured
தென்மேற்கு புறநகர்ப் பகுதியான St-Remy-les-Chevreuse மற்றும் Orsay பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் Elisabeth Borne வானொலி ஒன்றிற்கு தெரிவித்தார்.
அத்துடன் RER ரயிலில் 3 பெட்டிகள் கவிழ்ந்ததாகவும், அதிஷ்டவசமாக 7 பேர் மட்டுமே காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பிரெஞ்சு தலைநகரத்திற்கு சென்றுகொண்டிருந்த வழியில் அதிகாலை 5 மணி அளவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினாலேயே இவ் விபத்து ஏற்பட்டதாக RATP அறிவித்தது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- பிரான்ஸிலும் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!