ஒன்டாறியோ முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளரான ரொஷான் நல்லரட்னம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அச்சுறுத்தல் விடுக்கும் மின்னஞ்சல் அனுப்பியதாக குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்துள்ளார். Roshan Nalaratnam Email Allegations
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள புதிய ஜனநாயக் கட்சி, கன்சர்வேடிவ் கட்சி சார்பில் ஸ்கார்போரோ கில்வுட்டில் போட்டியிடும் வேட்பாளரான நல்லரட்னம் , தமிழ் சமூக உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவாதங்களை நல்லரட்னம் ஏன் தவிர்க்கின்றார் என கேள்வி எழுப்பியமையை அடுத்தே அவர் இவ்வாறு அச்சுறுத்தியுள்ளதாக புதிய ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த மின்னஞ்சலில் நல்லரட்னம், மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும், தேர்தலுக்கு பின்னர் பாடம் கற்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் உட்பட 96 பேருக்கு இம்மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறித்த மின்னஞ்சல் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
நல்லரட்னம் டொரண்டோ பொலிஸ் அதிகாரி என்பதால் அவரிடமிருந்து குறித்த மின்னஞ்சல் வருகின்றமையானது தமக்கு மிகுந்த அச்சத்தைத் தருவதாக புதிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை இம்மின்னஞ்சலுக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும், அந்த மின்னஞ்சல் முகவரியே தம்முடையது இல்லையெனவும் நல்லரட்னம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.