தற்கொலை செய்துகொண்ட நீட் தேர்வு மாணவியிடம் இருந்து கிடைக்கப்பெற்ற அதிர்ச்சி கடிதம்!!

0
669
shocking letter student  committed suicide

(shocking letter student  committed suicide)

விழுப்புரம் தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய  மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார். விழுப்புரம் மாவட்டம்   செஞ்சி  அருகே  பெருவளூர்  கிராமத்தை  சேர்ந்த  கட்டிட தொழிலாளி சண்முகம் என்பவரின் மகள் பிரதீபா நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால்  தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த பிரதீபா பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண் பெற்றவர் ஆவார். கடந்த  ஆண்டு படிக்க வாய்ப்பு கிடைத்தும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டுமென்று, இந்தாண்டு பிரதீபா நீட் தேர்வு எழுதியிருந்தார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் போதிய பணம் இல்லாததால் அரசு கல்லூரியில்  சேர்ந்து விடலாம் என காத்திருந்தார்.

ஆகவே , மாணவி பிரதீபா மரணத்துக்கு வினாத்தாள் குளறுபடியும் ஒரு காரணமாகியுள்ளது. ஆண்டு தோறும் நீட் தேர்வால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிப்பதால் நீட் தேர்வுக்கான எதிர்ப்பு வலுத்துள்ளது.

tags;-

More Tamil News

Tamil News Group websites :