ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியே தோல்விக்கு காரணம் – ஜனாதிபதி வருத்தம்

0
404
tamilnerws ranil maithreepala battle kottabaya political enter

(tamilnerws ranil maithreepala battle kottabaya political enter)

கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி குறிப்பிடத்தக்க தோல்வியை எதிர்கொண்டது.

இதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் ரீதியான கூட்டணியை பேணியமையே காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்து தோல்வியடைந்தமை தொடர்பாக அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, அனைத்து கட்சிகளும் உட்கட்சி மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

எந்த கட்சியும் உட்கட்சி மோதல்களால் பாதிக்கப்படவில்லை என யாரும் உறுதியாக கூற முடியாது.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் அதன் ஆரம்ப காலத்திலிருந்து இந்த பிரச்சினையால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மாதுளுவாவே சோபித்த தேரரின் நினைவு தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் ஆட்சியேற்ற போது நடைமுறைப்படுத்தப்பட்ட நூறு நாள் வேலைத்திட்டமானது முட்டாள்தனமாக செயற்பாடு என்று குற்றம்சுமத்தினார்.

அதனை யார் தயார் செய்தார்கள் என்று தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்காரணமாக ஐக்கிய தேசிய கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும் அதிருப்தியை வௌியிட்டனர்.

ஜனாதிபதியின் இந்த கருத்து தொடர்பாக பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுடன் கூட்டணி கூட்டணி வைப்பதற்கு முயற்சிக்கிறார் என தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அத்துடன், தன்னை முன்னிலைப்படுத்தி இந்த குற்றச்சாட்டை ஜனாதிபதி தெரிவித்திருப்பது வருத்தத்திற்குரிய விடயம் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

(tamilnerws ranil maithreepala battle kottabaya political enter)

More Tamil News

Tamil News Group websites :