அகதி விசாரணைகளில் சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்பட அதிகாரிகள் ஆலோசனை

0
600
Authorities social networks asylum investigations, Authorities social networks asylum, Authorities social networks, social networks asylum investigations, networks asylum investigations, Tamil Swiss news, Swiss Tamil news

குடியேற்றத்திற்கான அரச செயலகம் (SEM), அகதி விசாரணை முடிவுகள் தகவல்களை தெரிவிக்க, பேஸ்புக் மற்றும் பிற சமூக நெட்வொர்க்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று அலோசித்து வருகிறது. Authorities social networks asylum investigations

குடியேற்றத்திற்கான அரச செயலக செய்தித் தொடர்பாளர் Martin Reichlin இது பற்றி கூறிய போது, “சமூக வலைதளங்களில் புகலிடம் கோருவோர் வெளியிடுகின்ற தகவல்களின்படி, குடும்ப உறவுகளை குறிப்பது போன்ற தகவல்கள் புகலிடம் கோருவோரின் விசாரணை நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முடிவுகளை எடுக்க உதவும்,”  என்றார்.

“குடிவரவுக்கான அரச செயலகம் சமூக வலைப்பின்னல்களிடமிருந்து பகிரங்கமாக அணுகக்கூடிய தகவல்கள், சேகரிப்பு மற்றும் புகலிட பயன்பாட்டின் செயலாக்கத்தில் பயன்படுத்தப்பட வேண்டும், என்பதை எவ்வாறு தெளிவுபடுத்த ஒரு உள் வேலை குழு அமைக்கப்பட்டுள்ளது,” என அவர் மேலும் தெரிவித்தார்.

டிசம்பர் 2016 ல் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய ஒரு நைஜீரிய மனிதரின் வழக்கு பின்வருமாறு, அவர் தனது சொந்த நாட்டில் துன்புறுத்தப்படுவதாக கூறி புகலிடம் கோரினார். எனினும், அவர் தனது அடையாளத்தை பற்றி முரண்பாடான தகவல்களை வழங்கினார், அதனால் புலம்பெயர் அதிகாரிகள் மேலும் விசாரணை செய்தனர். ஆனால் அவரது மனைவி பேஸ்புக்கில் புகைப்படம் பதிவேற்றியிருந்தார். அவர் நைஜீரியாவில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வரவில்லை, மாறாக ஸ்பெயினில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு வந்திருக்கிறார். அவர் ஸ்பெயினில் ஒரு வித்தியாசமான அடையாளத்துடன் வசித்து, அங்கு ஒரு கடையை நடத்தி வந்துள்ளார். எனவே இதை அறிந்து கொண்ட அதிகாரிகள் அவரை ஸ்பெயினுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.

Authorities social networks asylum investigations, Authorities social networks asylum, Authorities social networks, social networks asylum investigations, networks asylum investigations, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites