பணிப்பெண் வேலைக்கு சென்ற என் மனைவி எங்கே – கதறி அழும் கணவன்

0
451
house vacancy Kuwait wife missing three months husband crying chilaw

குவைட் நாட்டிற்கு தொழில்வாய்பிற்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். house vacancy Kuwait wife missing three months husband crying chilaw

சிலாபம் ஆராச்சிக்கட்டு பகுதியை சேர்ந்த வறுமையான குடும்பஸ்த்தர் தனது மனைவியை கடந்த மார்ச் மாத இறுதியில் குவைட் நாட்டிற்கு வீட்டு பணிப்பெண் தொழிலுக்காக அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அனுமதியுடன் குருநாகலில் இயங்கும் நிறுவனம் ஒன்றினூடாகவே தனது மனைவியை குவைட் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்நிலையில் மனைவி குறித்த நாட்டிற்கு சென்று விட்டாரா அல்லது வேறு ஒரு நாட்டிற்கு கடத்தப்பட்டுள்ளரா என்பது தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கப்பெறவி;லலை எனவும்,

முகவர் நிலையத்தில் குறித்த விடயம் தொடர்பில் கோரினால் மனைவியை அனுப்பி விட்டதாகவும் அதன் பின்னர் தாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.

அது மாத்திரமின்றி மனைவி குறித்து முகவர் நிலைய அதிகாரிகள் தவறான பேசுவதாகவும் குறித்த மனைவியின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தொழிலுக்காக சென்றுள்ள தனது மனைவிக்கு 32 வயதெனவும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் கணவர் பொலிஸ் நிலையத்தில் கண்ணீர்விட்டப்படி முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
house vacancy Kuwait wife missing three months husband crying chilaw

More Tamil News

Tamil News Group websites :