பணத்தை கொள்ளையடித்த குரங்கு: வழக்கு பதிவு செய்­வது தொடர்­பில் பொலிஸார் குழப்பம்

0
582
monkey robbed 2 lakh police confused fact division case registered

monkey  robbed 2 lakh police confused fact division case registered

இந்­தியாவில்  வங்­கி­யொன்­றி­லி­ருந்து வெளியே வந்த வர்த்­தகர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து 2 இலட்சம் ரூபா பணத்தை அங்­கி­ருந்த குரங்கு ஒன்று பறித்துச் சென்­றுள்­ள­தை­ய­டுத்து, இந்த கொள்ளைக் குறித்து எந்தப் பிரிவில் வழக்கு பதிவு செய்­வது என்­பது தெரி­யாமல் பொலிஸார் குழம்­பி­யுள்­ளனர்.

உத்­தரப் பிர­தேச மாநிலம் ஆக்­ராவைச் சேர்ந்­தவர் விஜய் பன்சால்.  இவர் உள்­ளூ­ரி­லுள்ள வங்­கியொன்றில் 2 இலட்சம் ரூபா பணத்தை எடுத்து தனது பையில் சுற்றி தனது மக­ளிடம் கொடுத்­துள்ளார்.

அப்­போது திடீ­ரென சில குரங்­குகள் அவர்­களை சூழ்ந்து அவர்­களைத் தாக்க முயன்­றுள்­ளன. அதில் ஒரு குரங்கு கையில் வைத்­தி­ருந்த  பணப்பையை பறித்துக் கொண்டு ஓடி­ய­தை­ய­டுத்து, அந்த குரங்கை விஜய் பன்சால் மற்றும் அங்­கி­ருந்­த­வர்கள்  விரட்­டி­ய­படி சென்­றுள்­ளனர்.

ஆனால் குரங்கு அருகில் இருந்த கட்­டி­டத்தின் மாடிக்கு தாவிச் சென்று அமர்ந்து கொண்­டது. சற்று நேரத்­துக்கு பின்னர் பணப் பையி­லி­ருந்து ரூபா நாண­யத்­தாள்­களை கிழித்­த­படி வீசி ஏறிந்­துள்­ளது. சுமார் 60 ஆயிரம் ரூபா பணத்தை இது­போ­லவே வீசி எறிந்த குரங்கு, பின்னர் பணத்துடன் அங்கிருந்து ஓடி­யுள்­ளது.

60 ஆயிரம் ரூபாவை குரங்­கிடம் இருந்து மீட்ட விஜய் பன்சால், மீத­முள்ள ஒரு இலட்­சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தை இழந்­துள்ளார்.

பின்னர் இது­பற்றி பொலிஸில்  முறைப்­பாடு செய்­துள்­ளனர். ஆனால் பொலிஸார், குரங்கு தாக்­கி­ய­தாக வழக்கு பதிவு செய்ய முடியும், குரங்கு கொள்­ளை­ய­டித்­த­தா­கவோ அல்லது பணத்தை பறித்துச் சென்­ற­தா­கவோ வழக்குப் பதிவு செய்ய முடி­யாது. இந்த சம்­பவம் தொடர்­பாக எப்­படி வழக்கு பதிவு செய்­வது என குழம்­பி­யுள்­ளனர்.

இதை­ய­டுத்து மாவட்ட ஆட்சித் தலை­வரை சந்­தித்து விஜய் பன்சால் முறைப்பாடு செய்துள்ளார். உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குரங்கை தேடி பணத்தை மீட்டு தருமாறு கோரியுள்ளார்.

monkey  robbed 2 lakh police confused fact division case registered

More Tamil News

Tamil News Group websites :