பிரான்ஸில், 19 வயதான இளைஞன் படுகொலை!

0
621
Jewellery attack-1.5 million support killer

Nice பகுதியில் Rue d’Angleterre இலுள்ள நகைக்கடையில் கொள்ளையிட்ட நபரை அக்கடை உரிமையாளரே கொன்ற சம்பவம் கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.  Jewellery attack-1.5 million support killer

குறித்த 19 வயதான இளைஞன் அக்கடையில் கொள்ளையிட வந்தபோதே, குறித்த நகை வியாபாரியான அக் கடை உரிமையாளர் தன் துப்பாக்கியால் 3 தரம் சுட்டுள்ளார். அதில் ஒரு துப்பாக்கி தோட்டா பட்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக அந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் வரும்போது காவற்துறை வல்லுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியதுடன் விசேட பேஸ்புக் பக்கத்தின் ஊடாக மட்டும் குறித்த நகை கடை உரிமையாளரிற்கு 1.5 மில்லியன் கணக்கான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நாளை வெள்ளிக்கிழமை வரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**