பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைத்தால் இந்தியா மறுக்காது! – ராஜ்நாத் சிங்

0
343
Minister Rajnath Singh said India refrain preparing talks Pakistan initiative

Minister Rajnath Singh said India refrain preparing talks Pakistan initiative

“பாகிஸ்தான் பேச்­சு­வார்த்­தைக்குத் தயா­ராகி அதற்­கான முன்­னெ­டுப்­பு­களை  மேற்கொண்டால் இந்­தியா அதை மறுக்­காது” என இந்­திய உள்­துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரி­வித்­துள்ளார்.

ஜம்மு–காஷ்மீர் மாநி­லத்தில் ரமழான் மாதத்தை முன்னிட்டு அமைதி நட­வ­டிக்­கை­களில் இந்­திய  பாது­காப்புப் படை­யினர் ஈடு­பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இராணுவம் அத்­து­மீறி தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. இதனால், பாகிஸ்தான் இரா­ணு­வத்­துக்கு இந்­திய பாது­காப்புப் படை­யினர் பதில் தாக்­குதல் நடத்தி வரு­கின்­றனர்.

இது­தொ­டர்­பான வீடியோ ஒன்­றையும் இந்­திய எல்லைப் பாது­காப்புப் படை வெளி­யிட்­டது. இதை­ய­டுத்து, தங்­களைத் தொடர்­பு­கொண்டு தாக்­குதல் நடத்த வேண்டாம் என பாகிஸ்தான் இரா­ணுவ வீரர்கள் கேட்­டுக்­கொண்­ட­தா­கவும் இந்­திய எல்­லைப்­பா­து­காப்புப் படை தெரி­வித்­தது.

இது­கு­றித்து ஆங்­கில பத்­தி­ரிகை ஒன்­றுக்கு அளித்­துள்ள பேட்டியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்  தெரி­வித்­துள்­ள­தா­வது,

“பாகிஸ்தான் பேச்­சு­வார்த்­தைக்குத் தயா­ரென்றால், நாம் ஏன் அதை மறுக்க வேண்டும். நமது அண்டை நாட்­டுடன் நல்ல நட்­பையே விரும்­பு­கிறோம். ஆனால், பேச்­சு­வார்த்­தைக்­கான முன்­னெ­டுப்­பு­களை பாகிஸ்தான் எடுக்க வேண்டும். நமது எல்­லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்­து­மீறி தாக்­குதல் நடத்தி வரு­கி­றது. போர்­நி­றுத்த உடன்­ப­டிக்­கையை மீறி அந்த தாக்­கு­தல்­களை பாகிஸ்தான் இராணுவம் நிகழ்த்தி வரு­கி­றது. இந்­திய எல்­லைப்­ப­கு­திக்குள் ஊடு­ருவும் தீவி­ர­வா­தி­களை ஒடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். ரமழான் மாதத்தை முன்­னிட்டு இராணுவ நட­வ­டிக்­கை­களை நாம் நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்தோம். ஆனால், பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Minister Rajnath Singh said India refrain preparing talks Pakistan initiative

More Tamil News

Tamil News Group websites :